Thaipusam 2022 தைப்பூசம் திருவிழா பற்றி தெரிந்துகொள்ளலாம்

Thaipusam 2022: தைப்பூசம் அல்லது தை பூசம் என்பது பெரும்பாலும் தமிழ் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். இது தமிழ் சூரிய மாதமான தையில் வருகிறது, இது மற்ற இந்து நாட்காட்டிகளில் சூரிய மாதமான மகரத்தில் வருகிறது.

Also Read –> Tamilnadu பொங்கல் பரிசு 2022

தமிழ்ச் சமூகம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் மட்டுமின்றி மொரீஷியஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழ்ச் சமூகங்கள் குறைவாக உள்ள நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா தைப்பூயம் என்றும் தைப்பூயம் என்றும் குறிப்பிடப்படுகிறது. சூரபதம் என்னும் பொல்லாத அரக்கனை வெல்வதற்கு பார்வதி முருகனுக்கு வேல் அல்லது ஈட்டியை கொடுத்த நிகழ்வை இந்த திருவிழா நினைவுபடுத்துகிறது.

Thaipusam 2022 Date in Tamilnadu- தைப்பூச திருநாள் 2022 எப்போது?

  • தை மாதம் 5ம் தேதி (ஜனவரி 18) அதிகாலை 5.58 மணிமுதல் பூசம் நட்சத்திரம் வருகிறது. இன்று முழுவதும் பூச நட்சத்திரம் இருக்கிறது.

Thaipusam புராணக்கதை

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஒருநாள் கடுமையான போர் ஏற்பட்டது. அதில் தேவர்களால் போரில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் அசுரர்கள் பல்வேறு தொல்லைகளும், கஷ்டங்களையும் கொடுத்து வந்தனர். அசுரர்களை எப்படி வெல்வது என்று தெரியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

அசுரர்களை வெற்றி பெற, தேவர்களுடன் சேர்ந்து போரிட தலைமை தாங்கி செல்லக்கூடிய சக்தி வாய்ந்த தலைமைத் தேவை என வேண்டினர். கருணைக்கடலான ஈசன், தன் நெற்றிக்கண்ணிலிருந்து கந்தனை உருவாக்கினார்.நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள் ஆறு அழகிய குழந்தைகள் ஆகின. அந்த குழந்தைகளை கார்த்திகை பெண்கள் வளர்த்த பின்னர் அறுமுகனாக உருவெடுத்தார். இந்த தைப் பூச திருநாளில் தான் முருகனுக்கு பார்வதி தேவி ஞான வேல் வழங்கினார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

thaipusam 2022

Thaipusam 2022 Holiday in Tamilnadu

  • தைப்பூசம் அன்று தமிழக அரசு விடுமுறை நாள் ஆகும். பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் இயங்காது

Thaipusam Festival in Tamilnadu

  • தைப்பூச திருநாள் ஆறுபடை வீடுகளில் மற்ற கோயில்களை விட பழநியில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
  • தைப்பூசம் அன்று வடலூர் ஸ்ரீ இராமலிங்க அடிகளார் ஜோதி தரிசனம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

தைப்பூச சிறப்புகள்

  • முருகனுக்கு நான்கு நட்சத்திரங்கள் உகந்தது. அவை வைகாசி விசாகம், கார்த்திகை, பங்கினி உத்திரம், தைப்பூசம் ஆகும்.
  • முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம் திருநாள்.
  • ஆறுவராக உதித்த முருகன் சக்தியின் துணையால் ஒருவனான நாள் கார்த்திகை திருநாள்.
  • அசுரர்களை அழித்து, அவர்களை ஆட்கொண்ட நாள் ஐப்பசியில் வரும் சஷ்டி.
  • வள்ளியை திருமணம் புரிந்த நாள் பங்குனி உத்திரம் திருநாள்.
  • அன்னையிடம் வேல் வாங்கி, திருக்கையில் வேல் ஏந்திய நாள் தான் தை பூசம் திருநாளாகும்

Leave a Comment